1.கப்பல்படையில் பைலட் பணி
கேரளா மாநிலம் ஏழி மலையிலுள்ள இந்திய கப்பல் படை அகாடமியில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:15.11.2010
1.கப்பல்படையில் பைலட் பணி
கேரளா மாநிலம் ஏழி மலையிலுள்ள இந்திய கப்பல் படை அகாடமியில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:15.11.2010
1.பணியின் பெயர்:pilot(Indian Navy Short Service Commission)
வயது வரம்பு:19முதல் 23 வயதுக்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :குறைந்தது 65 %மதிப்பெண்களுடன் ஏதாவதொரு
பட்டப்படிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.+2 வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
இணையதள முகவரி:www.nausena-bharti.nic.in
2.டிகிரி தகுதிக்கு கப்பல் படையில் வேலைவாய்ப்பு:
இந்திய கப்பல் படையில் ஏவியேஷன் பிரிவில் observer officer பணியில் சேர திருமணமாகாத இந்திய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: observer officer
கல்வித்தகுதி :கணிதம்,இயற்பியல் பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் குறைந்தது 65 %மதிப்பெண்களுடன் எதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க் வேண்டும்.
வயது:19-லிருந்து 23 -க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:8.11.2010
கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி:www.nausena-bharti.nic.in
3.இந்தியன் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணி
முன்னணி பொது துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணியிடங்களை
நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்:probationary officer
காலியிடங்கள்:850
வயது:21முதல்30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.14,500-25,700
கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தது 55 %மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:11.11.2010
மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.indianbank.in
4.ஓரியண்டல் வணிக வங்கியில் 322 புரபேஷனரி ஆபீசர் பணி
ஓரியண்டல் வணிக வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள 322 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:10.11.2010
பணியின் பெயர்: புரபேஷனரி ஆபீசர்
காலியிடங்கள்:322
வயது வரம்பு:-21-லிருந்து 30-வயதுக்குள்ளிருக்க வேண்டும்
தகுதி:ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.அறிவியல் பட்டதாரிகளுக்கு தேர்ச்சி விழுக்காடு 60 %-மும் ,இதர பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு மதிப்பெண் விழுக்காடு 55 %மாகவும் இருக்க வேண்டும். போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.கணினி சான்றிதழ்கள் அவசியம் .
கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி:www.obcindia.co.in
5. பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிசான் பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆர்ட்டிசான் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :525
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :27 .10 .2010
ஆன்லைன் விண்ணப்பங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி நாள் :04 .11 .2010
பிட்டர் :254
வெல்டர் -132
டர்னர் -24
மெஷினிஸ்ட்-43
எலக்ட்ரிசியன்-24
கிரேன் ஆப்பரேட்டர்-கம்-ரிகர் -30
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் -3
பர்னஸ் ஆப்பரேட்டர்-10
டீசல் மெக்கானிக்-2
27 வயதுடையவராக இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.10 ஆம் வகுப்பு தகுதியுடன் சம்பந்த்தப்பட்ட டிரேடில் 60 % மதிப்பெண்களுடன் தேசிய டிரேடு சான்றிதழும்(NTC ),தேசிய பழகுநர் சான்றிதழும்(NAC )
பெற்றிருக்க வேண்டும்.
இணையதளமுகவரி : http://careers.bhel.in
6. ESI கழகத்தில் எழுத்தர் பணி
மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Employees State Insurance கழகத்தின் கேரளா பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் :Lower Division Clerk (LDC )
காலியிடங்கள் :54
சம்பளம் :ரூ.5200 -20200
18 -27 வயதுக்குள் இருக்க வேண்டும்.வயது உச்ச வரம்பின் படி வயது தளர்வு உண்டு.+2 தகுதியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.கம்ப்யூட்டரில் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :25 .10 .2010
ஆன்லைன் விண்ணப்பங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய
கடைசி நாள் :01.11 .2010
7. பொறியியல் /முதுகலை பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜினியர் பணி
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1.Scientist/Engineer – 2
2.Thermal Engineering-2
3.Aerospace Engineering – 5
4. Power Electronics-5
5.Industrial Engineering & Management -2
6. Aerospace Engineering-8
7.Electrical Engineering-1
8.Chemaistry/Electro Chemistry – 2
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.வயது உச்ச வரம்பின் படி வயது தளர்வு உண்டு. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியானவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கபடுவர்.
கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகுதிகளுக்கு
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :20 .10 .2010
8. குறுகிய கால இலவசத் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அக். 1-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பிட்டர், எலெக்ட்ரீஷியன், பர்னர், இயந்திர வேலையாள் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சியில் பங்கு பெற, குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 14 வயது நிறைவடைந்தவர்கள் சேரலாம். 60 மணி நேரம் முதல் 650 மணி நேரம் வரை தொழில் பயிற்சி பெறலாம். மாலையில் 3 மணி நேரம் அல்லது பயிற்சியாளர்களின் தேவையின் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ள நபர்கள் தங்களது கல்வி சான்றிதழின் அசல் மற்றும் நகலுடன், அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் செல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு - 04328-290590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
9. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு கால அவகாச சலுகை.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, தமிழக அரசு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதனடிப்படையில், பழைய பதிவு மூப்புடன் பதிவு அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஏற்கெனவே, 04.10.2010-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 02.09.2010 முதல் 14.09.2010 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், தற்போது அதற்கான கால அவகாசம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19.10.2010 ம் தேதி வரை, நாள்தோறும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரில் சென்று விண்ணப்பங்கள் அளித்து புதுப்பித்துக்கொள்ளலாம்.
இதற்கு வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி, அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் அசல் மற்றும் ஜெராக்ஸ் இணைத்து அளிக்க வேண்டும். மேலும், 19.10.10-ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
10. தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதன் மூலம் டாக்டர்கள் ,இன்ஜினியர்கள்,கொத்தனார்கள் ,தச்சர்கள் என பலர் வெளிநாட்டில் பணியமர்த்தப் பட்டுளனர். வெளிநாடுகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்யும் நேரம் மற்றும் செலவுகளை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாம்களில் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விண்ணபிக்கலாம்.இதில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள் .பாஸ் போர்ட் ஆகியவற்றின் நகல் மற்றும் 4 புகைப்படத்துடன் கொண்டு வர வேண்டும்.பாஸ்போர்ட் இல்லாதவர்களும் ,முறையான தகுதி இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
For Contact:9940393617,9952910460,9443690272
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக